Wednesday 17 November 2021

பாரதியின் புரட்சி வரிகள்

‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’ 


 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 

இனிதாவ தெங்கும் காணோம்" 

எனக் கூறிய பாரதியார், சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ள பாரதியார் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை  ஊட்டினார்.  

அவரது படைப்புகள், புரட்சி வரிகள் தனி மனித வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

பாரதியார் எழுதிய பாடல்கள், கவிதைகள் மற்றும் புதிய ஆத்திசூடி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளில் உள்ள ஒருசில புரட்சி வரிகளுக்கு  சிறுகதைகள் வடிவில் விளக்கமாக எடுத்துக் கூறும் வகையில் ‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’ என்ற  நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துரை. சக்திவேல்

நூலாசிரியர்

No comments:

Post a Comment

பாரதியின் புரட்சி வரிகள்

‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவ தெங்கும் காணோம்"  எனக் கூறிய பாரதிய...